Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேந்தநாடு கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

நவம்பர் 06, 2021 04:24

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேந்தநாடு கிராமத்தில் மழையினால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்  மணிக்கண்ணன் ஆலோசனைப்படி திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் சென்றார்.

உடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் சேந்தநாடு ஊராட்சி மன்ற தலைவர், தங்க கோவிந்தராஜ்மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்